×

ஊரைவிட்டு ஓடிய மகள்! சாதூர்யமாக பேசி அழைத்துவந்து பிரித்த தந்தை! சோகத்தில் பெண் தற்கொலை

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரில் வசிக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த முத்து பழனியம்மாள் ஆகியோரின் மகள் முத்துப்பாண்டியம்மாள்(வயது 20) என்பவரும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (20) என்பவரும் பண்னைக்காடு வீரம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மணம் விரும்பி காதலித்து வந்தனர். இதை அறிந்த முத்துகிருஷ்ணன் தந்தை முத்து இவர்களின் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளார்.இதனால் இருவரும் சென்னை சென்று திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக
 

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தேவதானப்பட்டி கக்கன்ஜி நகரில் வசிக்கும் தலித் இனத்தைச் சேர்ந்த முத்து பழனியம்மாள் ஆகியோரின் மகள் முத்துப்பாண்டியம்மாள்(வயது 20) என்பவரும் அதே பகுதியில் உள்ள கிருஷ்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (20) என்பவரும் பண்னைக்காடு வீரம்மாள் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகின்றார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மணம் விரும்பி காதலித்து வந்தனர். இதை அறிந்த முத்துகிருஷ்ணன் தந்தை முத்து இவர்களின் எதிர்ப்பு தெரிவித்துஉள்ளார்.இதனால் இருவரும் சென்னை சென்று திருமணம் செய்து கொண்டு கணவன் மனைவியாக 3 தினங்கள் குடும்பம் நடத்தியுள்ளனர்.

rep image

பையனின் தகப்பனார் முத்து இருவரையும் ஏற்றுக் கொள்வதாக சமாதானம் செய்து சென்னையிலிந்து தேவதானப்பட்டிக்கு வரவழைத்து ஊர் பஞ்சாயத்தில் பெண்ணை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் தேவதானப்பட்டி காவல் துறை பையனின் வயது காரணம் காட்டி பிரித்துவைத்துள்ளனர். இதனால் மனமுடைந்த முத்துப்பாண்டியம்மாள் இன்று (15.11.2020) ஞாயிறு காலை 11மணிக்கு தன்னுடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். எனினும் இரவு 9மணி வரை காவல் துறை சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இறந்த முத்துப்பாண்டியம்மாள் உடல் அவரின் வீட்டில் தான் உள்ளது. மனிதநேயமிக்க காவல் துறை முறையாக விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து,முத்துப்பாண்டியம்மாள் தற்கொலைக்கு காரணமாகவர்கள் கைது செய்ய வேண்டும் என மாநில பொதுச்செயலாளர் தலித் விடுதலை இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.