×

காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்து ஆட்டம்காட்டிய வாலிபர்..! போலீசின் அதிரடி முடிவு

24 வயது முதுகலை பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபரிடம் சமரசம் செய்து வைத்த போலீசார், காவல்நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர். சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பணைமடல் ஊராட்சியில் இந்திரா நகரில் வசித்து வந்த மருதமுத்து- லட்சுமி ஆகியோரின் மகள் பிரியங்கா (வயது 24) இவர் எம்பிஏ படித்தவர். இவருக்கும் தாண்டானூர் ஊராட்சியிலுள்ள காட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பழனிசாமி மகன் ராஜமுத்து (வயது 27) என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும்
 

24 வயது முதுகலை பட்டதாரி பெண்ணை காதலித்து திருமணம் செய்ய மறுத்த வாலிபரிடம் சமரசம் செய்து வைத்த போலீசார், காவல்நிலையத்திலேயே திருமணம் செய்து வைத்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பணைமடல் ஊராட்சியில் இந்திரா நகரில் வசித்து வந்த மருதமுத்து- லட்சுமி ஆகியோரின் மகள் பிரியங்கா (வயது 24) இவர் எம்பிஏ படித்தவர். இவருக்கும் தாண்டானூர் ஊராட்சியிலுள்ள காட்டுக்கோட்டை பகுதியிலுள்ள பழனிசாமி மகன் ராஜமுத்து (வயது 27) என்ற வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் பரஸ்பரத்துடன் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பிரியங்காவை காதலித்த ராஜமுத்து திடீரென அவரை திருமணம் செய்ய மறுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா, ராஜமுத்து மீது ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்படி, இரு தரப்பினரையும் போலீசார் அழைத்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையின் முடிவில் ராஜமுத்து, பிரியங்காவை திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்ததின் பேரில் இருவருக்கும் காவல் நிலையத்திலேயே திருமணம் நடைபெற்றது.