×

காதல்: மனைவிக்கு சிலை எடுத்த கணவர்!

திரைப்பட நடிகரும், மருத்துவரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான சரவணனின் மாமியார் பிச்சைமணி அம்மாள் கடந்த 8ம் தேதி காலமாகிவிட்டார். சரவணனின் மாமனார் சேதுராமன். இவர் மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த தொழிலதிபர். மனைவி காலமாகிவிட்டதால், அவரை பிரிந்து தவித்து வந்தவர், மனைவி மீதுள்ள பாசத்தினால் அவரது உருவச்சிலை வடித்து வைத்து வணங்க வேண்டும் என்று பிரியப்பட்டுள்ளார். தனது விருப்பத்தை ஓவியர் மதுரை மருது மற்றும் வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்ன அகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பைபர் மெட்ரியல் மூலம்
 

திரைப்பட நடிகரும், மருத்துவரும், திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினருமான சரவணனின் மாமியார் பிச்சைமணி அம்மாள் கடந்த 8ம் தேதி காலமாகிவிட்டார். சரவணனின் மாமனார் சேதுராமன். இவர் மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்த தொழிலதிபர்.

மனைவி காலமாகிவிட்டதால், அவரை பிரிந்து தவித்து வந்தவர், மனைவி மீதுள்ள பாசத்தினால் அவரது உருவச்சிலை வடித்து வைத்து வணங்க வேண்டும் என்று பிரியப்பட்டுள்ளார்.

தனது விருப்பத்தை ஓவியர் மதுரை மருது மற்றும் வில்லாபுரத்தை சேர்ந்த சிற்பி பிரசன்ன அகியோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் பைபர் மெட்ரியல் மூலம் நவீன தொழில்நுட்பத்துடன் பிச்சைமணி அம்மாள் சிலையை வடித்துக்கொடுத்துள்ளனர்.

மனைவி இறந்த 30ம் நாளுக்குள் இந்த சிலை வேண்டும் என்று கூறியதால், அதற்குள் சிலை தயாராகிவிட்டது. இந்த சிலையை வைத்து பிச்சைமணி அம்மாளின் 30 நாளை வணங்கியுள்ளனர்.