சாலையில் கவிழ்ந்த டாஸ்மாக் லாரி… ஓட்டுநரைக் காப்பாற்றாமல் பாட்டிலை அள்ளிச் சென்ற மக்கள்!
திண்டுக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் மது ஏற்றி வந்த லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. வண்டியில் வந்தவரைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு சாலையில் கொட்டிக்கிடந்த பெட்டிகளை உடைத்து மக்கள் பாட்டில்களை எடுத்துச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் மது பாட்டல்கள் அடங்கிய பெட்டிகள் சாலையில் விழுந்து நொருங்கியது. பல பெட்டிகள் பாதுகாப்பாக இருந்தது. தகவல் அறிந்த கிராம மக்கள் மற்றும் மதுபான பிரியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மது பாட்டில்களை போட்டி போட்டு எடுத்துச் சென்றனர்.
போலீசார் இருப்பது தெரிந்தும், அவர்கள் வீடியோ எடுக்கிறார்கள் என்று தெரிந்தும் பலரும் முகமூடி, ஹெல்மெட் அணிந்து வந்து பாட்டில்களை எடுத்துச் சென்றனர். அதிக அளவில் கூட்டம் கூடியதால் போலீசாரால் வீடியோ எடுப்பதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.