×

தமிழகத்தில் தியேட்டர்களுக்கான தடை தொடரும்- தமிழக அரசு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்கு வங்காளத்தில் கொரோனா நெறிமுறை வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகள் வரும் அக். 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இதனால் தமிழகத்திலும் திரையரங்குகளை விரைவில் திறக்கவேண்டும் என்றும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை என்றும் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ
 

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து நாடு முழுவதும் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் மேற்கு வங்காளத்தில் கொரோனா நெறிமுறை வழிகாட்டுதல்களுடன் திரையரங்குகள் வரும் அக். 1 ஆம் தேதி முதல் திறக்கப்படவுள்ளது. இதனால் தமிழகத்திலும் திரையரங்குகளை விரைவில் திறக்கவேண்டும் என்றும் திரைத்துறையினர் கோரிக்கை விடுத்தனர். இதனிடையே திரையரங்குகள் திறக்கப்படுவது குறித்து மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கவில்லை என்றும் தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் அக்..31 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 5 ஆம் கட்ட தளர்வுகளுடன் ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, திரையரங்குகள், கடற்கரைகள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், பொழுது போக்கு பூங்காக்களை திறப்பதற்கான தடை தொடரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.