×

பொங்கல் அன்று ரூ.518 கோடிக்கு மது விற்பனை

 

பொங்கல் திருநாளில் ரூ.518 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளது. 


தமிழ்நாட்டில் பொங்கல், போகிப் பண்டிகை ஆகிய இரு நாள்களில், டாஸ்மாக்  வாயிலாக  மட்டும்  ரூ.518  கோடிக்கு மது விற்பனையாகியிருப்பதாக  செய்திகள் வெளியாகியிருக்கின்றன. போகிப் பண்டிகை நாளில் ரூ.217 கோடிக்கும், பொங்கல் நாளில் ரூ.301 கோடிக்கும் மது விற்பனையாகியிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் ரூ.454 கோடிக்கு மது விற்பனையாகிருந்த நிலையில்,  நடப்பாண்டில் அதை விட  14.10% அதிகம் ஆகும். 

கடந்த ஆண்டு பொங்கல்  திருநாளின் போது போது 4 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனையான நிலையில்,  நடப்பாண்டில் நாளை வரையிலான 4 நாள்களில்  மது வணிகம்  ரூ.900 கோடியைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இதேபோல் பொங்கலன்று மனமகிழ் மன்றங்களின் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது.