×

கடன் கேட்டு வாலிபர் மிரட்டியதால் பெண் தீக்குளிப்பு : பரபரப்பு வாக்குமூலம்!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த தம்பதி பிரதாபன் – ரேகா(32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வேலை பார்த்து வரும் பிரதாபன் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவாராம். தற்போது அவர் சென்னையில் தங்கியுள்ளார். இந்த நிலையில், இவரது மனைவி ரேகா கடந்த 17ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தகவலறிந்து
 

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளங்குளி பகுதியை சேர்ந்த தம்பதி பிரதாபன் – ரேகா(32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சென்னையில் வேலை பார்த்து வரும் பிரதாபன் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை தான் வீட்டுக்கு வருவாராம். தற்போது அவர் சென்னையில் தங்கியுள்ளார். இந்த நிலையில், இவரது மனைவி ரேகா கடந்த 17ஆம் தேதி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரை மீட்ட உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். தகவலறிந்து வந்த பிரதாபன் அவரது மனைவியிடம் விசாரித்த போது, வாலிபர் ஒருவர் கடன் கேட்டு மிரட்டியதால் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக ரேகா பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார். இதனை பிரதாபன் வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

அதில், கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு வாலிபர் ஒருவரிடம் ரூ.10,000 வட்டிக்கு கடன் வாங்கினேன். ஊரடங்கால் வட்டியை கொடுக்க முடியவில்லை. தொடர்ந்து கடன் கேட்டு மிரட்டி வந்த வாலிபர் பிள்ளைகளை கொன்று விடுவேன் என்று கூறியதால் நான் வெளியே சொல்லவில்லை. அவர் பேசிய அவதூறு வார்த்தைகளால் மனம் நொந்து தற்கொலைக்கு முயன்றேன் என்று கூறியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குடும்ப சூழல் காரணமாக ரேகா தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்தது. ஆனால், தற்போது கடன் கேட்டு மிரட்டியதால் தற்கொலைக்கு முயன்றதாக ரேகா கூறியிருப்பது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.