×

கொத்தவால்சாவடி மார்க்கெட் நாளைமுதல் 30ஆம் தேதிவரை மூடல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரேநாளில் 2,174 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று மட்டும் 48பேர் உயிரிழந்தனர். 10பேர் தனியார் மருத்துவமனையிலும், 38 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது
 

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுகடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. நேற்று ஒரேநாளில் 2,174 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் நேற்று மட்டும் 48பேர் உயிரிழந்தனர். 10பேர் தனியார் மருத்துவமனையிலும், 38 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 576ஆக அதிகரித்துள்ளது

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மீண்டும் முழு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள கொத்தவால் சாவடி மார்க்கெட் நாளை முதல் 30 ஆம் தேதி வரை மூடப்படுகிறது. மதியம் 2 மணி வரை கடைகள் இயங்க அனுமதித்த நிலையில் முழுவதுமாக மூடப்படுகிறது.