முழு கொள்ளளவை எட்டிய கொடைக்கானல் ஏரி : நீரை குறைக்க கோரிக்கை!
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல்வேறு அணைகளிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் கொடைக்கானல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 3 அடிக்கு நீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் ஏரியில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி வண்ணான்துறை, குறிஞ்சிநகர், பேத்துப்பாறை போன்ற பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து விடும் என்று
Aug 27, 2020, 08:54 IST
வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் பல்வேறு அணைகளிலிருந்து பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் கொடைக்கானல் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் 3 அடிக்கு நீரை வெளியேற்ற மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் ஏரியில் தண்ணீர் தேங்காமல் வெளியேறி வண்ணான்துறை, குறிஞ்சிநகர், பேத்துப்பாறை போன்ற பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து விடும் என்று கவலை தெரிவித்துள்ளனர்.