கரூரில் அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!
கரூரில் அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில்’ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதா விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பிஆர் அம்பேத்கரின் பெயரை முழக்கம் இடுவது இப்போதெல்லாம் ஃபேஷன் ஆகிவிட்டது. எதற்கெடுத்தாலும் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், என பேசுகிறார்கள். அதற்கு பதிலாக கடவுளின் பெயரை சொன்னால் கூட சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என கூறினார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமித் ஷாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேபோல் கரூரிலும், அமித் ஷாவை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சட்டமேதை, புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களைக் கண்டித்து கரூர் மாவட்டத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் சார்பில் இன்று (19.12.2024 ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.