×

“சாகும் போது தான் புகழ் என்பது பெருமையல்ல… இருக்கும்போதே கொண்டாடுங்கள்” தொ.பரமசிவன் மறைவுக்கு கமல் கண்ணீர் மடல்!

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் நேற்று (டிச. 24) காலமானார். அவருக்கு வயது 70. இந்நிலையில் பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவையொட்டி அவர் குறித்த தனது நினைவலைகளை கமல் ஹாசன் இரங்கல் கடிதம் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் “தொ.ப என்று நண்பர்களால் உரிமையோடு அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார் .அதுவும் தான் அவர். பெரியாரின் பகுத்தறிவு கருத்து மீது அபிமானம் கொண்டவராக இருந்தார். அதுதான் அவர். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்காற்பட்ட அறிஞராக
 

தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளரும், பேராசிரியருமான தொ.பரமசிவன் உடல்நலக் குறைவால் நேற்று (டிச. 24) காலமானார். அவருக்கு வயது 70.

இந்நிலையில் பேராசிரியர் தொ.பரமசிவன் மறைவையொட்டி அவர் குறித்த தனது நினைவலைகளை கமல் ஹாசன் இரங்கல் கடிதம் மூலம் பகிர்ந்துள்ளார். அதில் “தொ.ப என்று நண்பர்களால் உரிமையோடு அழைக்கப்பட்ட பேராசிரியர் தொ.பரமசிவன் ஒரு கம்யூனிஸ்டாக இருந்தார் .அதுவும் தான் அவர்.

பெரியாரின் பகுத்தறிவு கருத்து மீது அபிமானம் கொண்டவராக இருந்தார். அதுதான் அவர். ஆழ்வார் பாசுரங்களில் ஆழங்காற்பட்ட அறிஞராக இருந்தார் அதுவும் தான் அவர். சித்தாந்தத்தை விட வரலாற்றை விட மனிதன் தான் முக்கியம் என வாழ்ந்தார் அதுவும் தான் அவர்.

மேற்கண்டவாறு அவர் விரும்பி அணிந்த முகமூடிகள் அல்ல. அவரது அடையாளங்கள் சரி நிலைக்கேற்ப சமரசம் செய்து கொண்டவர் அல்ல. சமநிலையை அவரது நோக்கமாக இருந்தது. நான் வைணவ குடும்பத்தில் பிறந்தவன். பக்தி இலக்கியங்கள் ஊட்டி வளர்க்கப் பட்டவன் ஆனால் தொ. பாவை இந்த விஷயத்தில் என்னால் வெல்ல முடிந்ததே இல்லை. எனக்கு கற்பிக்கப்பட்ட வைணவத்தை விட அவர் வழியாக நான் புரிந்து கொண்ட வைணவம் மிகப்பெரியது. அதன் தத்துவார்த்தமான நாடுகளின் மீது புது வெளிச்சம் பாய்ச்சியவர் அவர் தான். அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. ஆனால் கடந்த நம்பிக்கையையும் அன்பையும் போட்டு குழப்பிக்கொள்ள அந்த சமநிலையை அவர் மீது எனக்கு பிரம்மையை உருவாக்கியது. சென்ட்ரிஸம் என்பதும் மையம் என்பதும் நடுவுநிலைமை என்பதும் இது தானே…!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அந்த மடலில், “எல்லாருமே மனிதர்கள்தான். மனம் தான் அவர்களை பட்டியலிடுகிறது .அதை வேறொரு பட்டியலில் வைக்கிறது. மனுவுக்கு வேலை இல்லை, அந்த உலகத்தை விட்டு வெகுதூரம் முன்னேறி வந்து விட்டோம். இது ஒரு பெரிய புரட்சி, இந்த புரட்சியை சாத்தியமாக்கும் ஒருவர் அவரை தெய்வம் என்று நான் கொண்டாட மாட்டேன். ஆனால் அவரை கொண்டாடியே ஆக வேண்டும். அவர் இருந்திருந்தால் இந்த கொண்டாட்டத்தை மறுத்து இருப்பார். என்னை போலவே அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இருக்கலாம். அவரை நாம் ஒரு தொன்மமாக ஆகிவிடக்கூடாது .

அவரை மனிதனாக உயிர்ப்போடு அணுகுவதன் வழியாகத்தான் இன்னொரு பரமசிவன் உருவாகும் சூழலை உருவாக்க முடியும். கலைஞர்களை, சிந்தனையாளர்களை, அறிஞர்களை, படைப்பாளிகளை, இசைவாணர்களை இருக்கும்போதே கொண்டாடுங்கள். சாகும் போது தான் புகழ் என்பது பெருமையல்ல. உரிய காலத்தில் கொண்டாடப்பட்டு இருந்தால் அவர் இன்னமும் நீண்ட நாட்கள் வாழ்ந்து அதிகம் எழுதி இருப்பார் என்று எனக்கு இப்போது தோன்றுகிறது. பாரத ரத்னா என்பது 18 வயதானவர்க்கும் வழங்கப்படலாம். பெறுபவன் சிறுவனா பெரியவனா என்பதல்ல, பங்களிப்பே பிரதானம். இந்த இரவின் மீது துயரின் வர்ணம் பூசப்படுகிறது. இதை எழுதும் தருணம் என் மகளோடு அமர்ந்திருக்கிறேன் . மகள்களின் முன் கண்ணீர் சிந்தும் வழக்கம் எனக்கு இல்லை . அவளுக்கு முதுகைக் காட்டி வெள்ளைத்தாளில் கண்ணீர் துளிகள் தெளிக்க விரல் நடுவே இந்த குறிப்பை எழுதுகிறேன். சமநிலையும் சமயங்களில் குறையும் என்பதை அக்ஷரா அறியாதிருக்கட்டும்” என்று கூறியுள்ளார்.