×

தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் உடனே ஆலோசகர்களின் உதவியை நாடுங்கள் - கமல்ஹாசன் 

 

நமக்குக் கிடைத்த இந்த அற்புதமான வாழ்க்கையை ஒவ்வொரு நாளும் கொண்டாடுங்கள் என உலகத் தற்கொலைத் தடுப்பு நாளில் கமல்ஹாசன் அறிவுறுத்தியுள்ளார்.  

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில், மனிதனால் தாங்க முடியாத துயரம் என்று சொல்வதற்கு எதுவுமில்லை. மனதை இழக்காதவரை நாம் எதையுமே இழப்பதில்லை’ எனும் ப.சிங்காரத்தின் வரிகளைத் துயருற்ற மனங்களை நோக்கிச் சொல்ல விரும்புகிறேன்.  தற்கொலை எண்ணம் தலைதூக்கினால் துளியும் தயங்காமல், நொடிகூடத் தாமதிக்காமல் ஆலோசகர்களின் உதவியைப் பெறுங்கள். ‘செயலே விடுதலை’ என்பதை உணர்ந்து உங்கள் வாழ்விற்கு அர்த்தமும் அழகும் கூட்டும் காரியங்களில் தீவிரமாக ஈடுபடுங்கள்.