'காலச்சுவடு' கண்ணனுக்கு 'செவாலியே விருது' - கமல் ஹாசன் வாழ்த்து!!
Updated: Jul 30, 2022, 08:20 IST
'காலச்சுவடு' கண்ணனுக்கு 'செவாலியே விருது' அறிவிக்கப்பட்டுள்ளதற்கு கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரெஞ்சு அரசு சார்பில் வழங்கப்படும் மிக உயரிய விருதான செவாலியே விருது காலச்சுவடு பதிப்பகத்தின் கண்ணனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பதிப்பு துறையில் இந்தியாவிற்கும் பிரெஞ்சுக்குமான உறவை மேம்படுத்தியதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காலச்சுவடு பதிப்பகம் மூலம் தமிழ் படைப்புகளை இந்தியா கடந்து , பிற நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி அதன் எல்லைகளை விரிவுபடுத்தும் வேலையை செய்து வரும் கண்ணனுக்கு செவாலியே விருது அறிவிக்கப்பட்டதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.