×

ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உடனடியாக ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வழியே இல்லை - கி.வீரமணி

 

தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை கடந்த 18 ஆம் தேதி கூட்டி, மீண்டும் 10 மசோதாக்களை நிறைவேற்றி, இரண்டாம் முறையாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு அனுப்பிவிட்ட நிலையில், அதற்கு உடனடியாக ஒப்புதல் (Assent) அளிப்பதைத் தவிர வேறு வழியே தமிழ்நாடு ஆளுநருக்கு இல்லை என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி குறிப்பிட்டுள்ளார். 

மீறி, வீம்புக்குக் காலதாமதம் செய்தாலோ, வேறு குறுக்குச்சால் ஓட்டினாலோ அடுத்தகட்டமாக உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தமிழ்நாடு அரசு மட்டுமல்ல; தமிழ்நாட்டு அரசினைத் தேர்ந்தெடுத்த அத்துணை வாக்காளர்ப் பெருமக்களும், அமைப்புகளும்கூட தாக்கல் செய்யும் வழக்கு சட்டப் போராட்டத்தின் அடுத்த கட்டத்திற்கு வழிவகுப்பதாகவே அது ஆகிவிடக் கூடும். எனவே, ‘‘குளவிக்கூட்டில் கைவிட்டு கலைத்த கதை’’யில் உள்ளவர்களுக்கு இனியாவது தங்கள் உயரம் என்ன? தங்களது அதிகாரம் எந்த அளவுள்ள ஒன்று என்பதைப் புரிந்துகொள்வதும், புரிந்து செயல்படுவதும் அவசரம், அவசியமாகும்!