#BREAKING : மாணவர் அமுதன் குடும்பத்திற்கு இழப்பீடு, அரசு வேலை!
கோவை மாணவர் கொலை தொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் பதில்... pic.twitter.com/HUAAoq83oI
— TVK Virtual Warriors HQ (@TVKWarriorsHQ) August 17, 2026
மாணவன் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், இது குறித்து சட்டப்பேரவையில் பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்.
கோவையில் மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த அமுதன் என்ற கல்லூரி மாணவர் குடும்பத்திற்கு முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.6 லட்சம் வழங்குவதற்கான ஆணையும், குடும்பத்திற்கு பட்டா வழங்குவதற்கான ஆணையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.மேலும் 6 லட்சம் கொடுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்
மேலும், அமுதனின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறியுள்ளார்.
மாணவர் தனுஷ் குடும்பத்திற்கு மாதாந்திர ஓய்வூதியம் 8000 பெற நடவடிக்கை. மாணவர் தனுஷின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்படும்
திருவெற்றியூர் மாணவர் கொலை வழக்கில் அவருடைய மாணவரின் சகோதருக்கு அரசு வேலை வழங்க முடிவு செய்துள்ளோம். எஸ்சி/ எஸ்டி பிரிவினர் கீழ் குடும்பத்தினருக்கு நிதியுதவி மற்றும் அவரின் பெற்றோர்களுக்கு ஓய்வூதியம் ஆகியவை வழங்கப்படும்” என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார்.
null