×

#JUST IN : சாலமன் பாப்பையாவுக்கு கௌரவ அரசு மரியாதை!

 

சாலமன் பாப்பையாவின் உடலுக்கு Guard of Honour எனப்படும் கௌரவ மரியாதை செலுத்தப்பட்டது. துப்பாக்கி குண்டுகள் முழக்கம் இல்லாமல் இந்த மரியாதை நடைபெற்றது.

மறைந்த தமிழறிஞர் சாலமன் பாப்பையா மறைவையொட்டி, மதுரை தத்தனேரி மின் மயானத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்கம் இன்றி அரசு மரியாதை வழங்கப்பட்டது. 'Guard of honour' என்ற மரியாதையின் அடிப்படையில் காவல்துறை சார்பில் பாப்பையா உடலுக்கு மரியாதை செலுத்தினர். இதில் அமைச்சர் நிர்மல்குமார், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி காவல் ஆணையர் முன்னிலையில் இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இதில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள் திரளாக பங்கேற்றனர்.

#WATCH | தமிழறிஞர் சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதை#ripsolomonpappaiah #Funeral #News18TamilNadu pic.twitter.com/6cskV6iPIn

— News18 Tamil Nadu (@News18TamilNadu) September 12, 2026