#JUST IN : மிஸ் டீன் இன்டர்நேஷனல் பட்டத்தை வென்றார் கியூபாவின் ஜோனா உரங்கா!
கியூபாவைச் சேர்ந்த ஜோனா உரங்கா, 'மிஸ் டீன் இன்டர்நேஷனல் 2026'க்கான பட்டத்தை வென்றார்.ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 2026ம் ஆண்டுக்கான மிஸ் டீன் இன்டர்நேஷனல் போட்டி நடந்தது. உலகெங்கிலும் உள்ள 13 முதல் 19 வயது வரையிலான இளம் பெண்களுக்காக நடத்தப்பட்ட இந்த புகழ்பெற்ற சர்வதேச அழகுப் போட்டியில் 30க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கியூபா நாட்டைச் சேர்ந்த ஜோஹன்னா உராங்கா வெற்றி பெற்று மகுடம் சூடியுள்ளார். நமீபியாவின் சாண்டல் போரன் முதல் ரன்னர் அப்பாகவும், பராகுவேயின் கியுலியானா ஒகாரிஸ் இரண்டாம் ரன்னர் அப்பாகவும், அமெரிக்காவின் ஆண்ட்ரியா அல்மெஸ்டிகா 3வது ரன்னர் அப்பாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.
30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களுடன் போட்டியிட்டு உரங்கர் வெற்றியாளராக உருவெடுத்தார்.
தனது வெற்றிக்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய உரிங்கா, மூன்று ஆண் ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் போட்டிக்குத் தயாராகி வந்ததாகக் கூறினார். தனது தயாரிப்புக்காக அவர் மேற்கொண்ட முயற்சிக்கு இறுதியாகப் பலன் கிடைத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
"நான் இதற்காக 3 வருடங்களுக்கும் மேலாகீத் தயாராகி வந்தேன். உண்மையைச் சொல்லிப்போனால், எனது கடின உழைப்பு, தயாரிப்புகள், நான் கலந்துகொண்ட வகுப்புகள் எனி எல்லாவற்றிற்கும் நல்ல பலன் கிடைத்துள்ளது. ஏனென்றால், இது எனது மிகப்பெரிய கனவுகளில் ஒன்றாகும், அது இப்போது நன்வாகியுள்ளது, என்று வா கூறினார்.