“கிட்னி திருடிட்டேனு அவதூறு வைக்கிறாங்க”- ஜூலி கண்ணீர்
May 29, 2026, 15:13 IST
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பிக்பாஸ் பிரபலம் ஜூலி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பிக்பாஸ் பிரபலம் ஜூலி, “கிட்னி திருடிட்டேனு அவதூறு வைக்கிறாங்க. ரூ.15 லட்சம் வாங்கி விட்டு ஏமாற்றியதாக அவதூறு பரப்புறாங்க! தவெகவிற்கு எதிராக ஒரு பொண்ணு பேசுறானு மனசாட்சியே இல்லாம அவ பெயரை கெடுக்குறீங்க.. Instant தாக்குதல் நடத்துறத விட்டுட்டு மக்களுக்கு Instant-ஆ உதவி செஞ்சா நல்லா இருக்கும். தவெகவிற்கு வாக்களிக்காத காரணத்திற்காக தாக்குதல் நடத்துவதா?” எனக் கேள்வி எழுப்பினார்.