×

ஜெயலலிதா நினைவிடம் : சிறப்பு அதிகாரி நியமனம்!

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் 6 முறை முதல்வராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசியல் களத்தில் இரும்பு பெண்மணியாக வலம்வந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது நினைவிடம் சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே உள்ளது. இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில்
 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணியை கண்காணிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தின் 6 முறை முதல்வராக இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. தமிழக அரசியல் களத்தில் இரும்பு பெண்மணியாக வலம்வந்த ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நல குறைவால் உயிரிழந்தார். அவரது நினைவிடம் சென்னை மெரினாவில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே உள்ளது.

இந்நிலையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் கட்டப்பட்டுவரும் ஜெயலலிதா நினைவிட பணிகளுக்காக சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பாண்டியராஜன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜெயலலிதா நினைவிடம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க மூன்று மாதங்களுக்கு பாண்டியராஜன் தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.