ஜனநாயகன் வழக்கு - ஜன.19ல் விசாரணை
இந்தாண்டு பொங்கல் ரேசிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது ஜனநாயகன்.
ஜனநாயகன் தணிகை தொடர்பான சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி இந்த வாரம் முழுவதும் ஜனநாயகம் திரைப்படத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதற்கான வாய்ப்பு இல்லாமல் போய் உள்ளது. அடுத்த வாரம் திங்கட்கிழமை (ஜனவரி 19) தான் விசாரிப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஜனநாயகன் திரைப்பட தணிக்கை தொடர்பான வழக்கை ஜன.19 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்கும் என உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அப்படி பார்த்தால் அதற்குள் பொங்கலும் முடிந்துவிடும் வார இறுதியில் முடிந்து விடும் எனவே பொங்கல் பந்தயத்திலிருந்து ஜனநாயகம் திரைப்படம் வெளியேற்றப்பட்டது.
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஆட்சி செய்யும் மத்திய அரசின் அதிகாரத்துக்குட்பட்ட திரைப்பட தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காததை அடுத்து விஜய்யின் ஜனநாயகம் திரைப்படம் வெளியாகாமல் போய் உள்ளது குறிப்பிடத்தக்கது