ரூ. 50 கோடி மதிப்பிலான ஸ்ரீரங்கம் கோயில் நிலம் ஆக்கிரமிப்பா?- அடிபடும் திமுக நிர்வாகியின் பெயர்
Sep 18, 2026, 16:02 IST
ரூ.50 கோடி மதிப்புள்ள ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் நிலத்தில் திமுக அலுவலகம் கட்டப்பட்டுள்ளதாக எழுந்துள்ள புகார் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் நிலம் தொடர்பாக எழுந்துள்ள ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டு தற்போது கவனம் பெற்றுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் பெயரும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலம் யாருடையது? அங்கு நடந்தது என்ன? ராம்குமாருக்கு இதில் என்ன தொடர்பு? இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா? விசாரணை முழுமையாக நடைபெற்று, ஆவணங்களுடன் உண்மை வெளிச்சத்திற்கு வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.