×

"சொத்து விவரங்கள் தவறு" - ஈபிஎஸ் மீதான வழக்கில் விசாரணை அறிக்கை தாக்கல்!

 

ஈபிஎஸ் சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 
 

தேனி மாவட்டத்தை சேர்ந்த வழக்கறிஞர் மிலானி, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி பழனிசாமி தனது வேட்பு மனுவின் பிரமாண பத்திரத்தில்  சொத்து மதிப்பை குறைத்து, பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாக  சேலம் நீதிமன்றத்தில் புகார் மனு கொடுத்திருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணி மனுவில் உண்மை தன்மை  இருந்தால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி விசாரணை மேற்கொண்ட குற்றப்பிரிவு போலீசார் எடப்பாடி பழனிச்சாமி மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் கீழ்  3  பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதுடன், உரிய  ஆவணங்களையும் திரட்டி வந்தனர். 

இந்நிலையில் 2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் சொத்து விவரங்களை மறைத்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணை அறிக்கையை சேலம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது காவல்துறை. சொத்து விவரங்கள் தவறாக இருப்பதாக விசாரணை அறிக்கையில் குற்றப்பிரிவு போலீஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.