×

பாமக தலைவர்களின் உருவப்படங்கள் மீது சாணி பூசியதால் பரபரப்பு!

சென்னை பூந்தமல்லி அருகே, சுவற்றில் வரையப்பட்டிருந்த பாமக தலைவர்களின் உருவப்படங்கள் மீது சாணி பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பாமக. ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி நீடிக்குமா? என இரு கட்சிகளிலும் சந்தேகம் வலுத்து வருகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியை உதறிவிட்டு, பாமகவை தனித்துப் போட்டியிட வைக்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூர் பகுதியில், பாமக சார்பில் கல்வெட்டு
 

சென்னை பூந்தமல்லி அருகே, சுவற்றில் வரையப்பட்டிருந்த பாமக தலைவர்களின் உருவப்படங்கள் மீது சாணி பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறது பாமக. ஆனால் சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி நீடிக்குமா? என இரு கட்சிகளிலும் சந்தேகம் வலுத்து வருகிறது. இந்நிலையில், அதிமுக கூட்டணியை உதறிவிட்டு, பாமகவை தனித்துப் போட்டியிட வைக்க அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் பூந்தமல்லி அருகே உள்ள பழஞ்சூர் பகுதியில், பாமக சார்பில் கல்வெட்டு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ராமதாஸ், ஜிகே மணி, காடுவெட்டி குரு ஆகியோரது உருவப்படங்கள் வரையப்பட்டுள்ளன. இந்நிலையில், 3 பேரின் உருவ படங்கள் மீதும் மர்ம நபர்கள் சிலர் சாணி பூசியுள்ளனர்.

இதனையறிந்து அப்பகுதியில் திரண்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, பாமகவினர் கலைந்து சென்றனர்.