இந்தியாவில் வெகுவாக குறைந்த கொரோனா மரணங்கள்!1
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10,229 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3,44,47,536 ஆக உள்ளது. அத்துடன் ஒரேநாளில் 125 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 4,63,655 ஆக உள்ளது.
அத்துடன் தற்போது கொரோனவால் பாதிக்கப்பட்டு1,34,096 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 11,926 ஆக உள்ளது. இதன் மூலம் கொரோனாவால் குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,38,49,785 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் மக்கள் தப்பிக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி வரும் நிலையில், இதுவரை இந்தியாவில் 1,12,34,30,478 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.