காளிங்கராயன் பாசனப் பகுதியில் உழவுப் பணிகள் தீவிரம்
ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலில் கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது தற்போது 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதையடுத்து காளிங்கராயன் அணைக்கட்டு தொடங்கி வைராபாளையம் கருங்கல்பாளையம் மூலக்கரை சாவடிபாளையம் கணபதிபாளையம் கொளாநல்லி கொடுமுடி வரை பத்தாயிரம் ஏக்கர் அளவுக்கு நெல் நடவு பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது .கருங்கல்பாளையம் பகுதியில் அடியுரம் போடுதல் இரட்டை மாடு கலப்பை கொண்டு மட்டை அடித்தல் சேத்துமடை பரப்பு கட்டுதல் வயலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள்
Aug 27, 2020, 17:30 IST
ஈரோடு காளிங்கராயன் வாய்க்காலில் கடந்த மாதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது தற்போது 500 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது இதையடுத்து காளிங்கராயன் அணைக்கட்டு தொடங்கி வைராபாளையம்
கருங்கல்பாளையம் மூலக்கரை சாவடிபாளையம் கணபதிபாளையம் கொளாநல்லி கொடுமுடி வரை பத்தாயிரம் ஏக்கர் அளவுக்கு நெல் நடவு பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது .கருங்கல்பாளையம் பகுதியில் அடியுரம் போடுதல் இரட்டை மாடு கலப்பை கொண்டு மட்டை அடித்தல் சேத்துமடை
பரப்பு கட்டுதல் வயலில் நீர் நிரப்புதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது இன்று முதல் நாற்று நடும் பணி நடக்கிறது .இதற்காக வில்லரசம்பட்டி வெட்டுகட்டுவலசு பகுதிகளில் இருந்து விவசாய கூலி தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்- ரமேஷ் கந்தசாமி