×

சிறையில் உள்ள இளவரசி பிப்ரவரி 5 ஆம் தேதி விடுதலை!

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள இளவரசி அடுத்த மாதம் விடுதலையாகிறார். இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இளவரசி பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி விடுதலை ஆகிறார் . வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் விடுதலையாகிறார்சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் அபராதத்தொகை ரூ.10கோடி செலுத்தாததால் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்.15ம் தேதி
 

சொத்துகுவிப்பு வழக்கில் சிறையில் உள்ள இளவரசி அடுத்த மாதம் விடுதலையாகிறார்.

இந்நிலையில் சிறையில் இருந்து வரும் இளவரசி பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி விடுதலை ஆகிறார் . வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் விடுதலையாகிறார்
சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் அபராதத்தொகை ரூ.10கோடி செலுத்தாததால் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் கடந்த 2017ம் ஆண்டு பிப்.15ம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும் தண்டனை காலம் முடியப்போகிறது. அண்மையில் நரசிம்மமூர்த்தி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சசிகலா விடுதலை பற்றி கேட்ட கேள்விக்கு, சசிகலா ஜனவரி மாதம் 27 ஆம் தேதி விடுதலையாக உள்ளதாக கர்நாடக சிறைத்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது..