×

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்!

 

தமிழகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறை செயலாளராக இன்னசென்ட் திவ்யாவும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் ஜி. ரவிக்குமார், வேளாண்மை உழவர் நலத்துறை இணைச் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் செயலாளராக டி. மோகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை இணை கூடுதல் செயலாளராக ஷ்ரேயா பி சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை இயக்குநர் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மேலாண் இயக்குநராக ராஜ கோபால் சுங்காரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர் ஆட்சியராக சரண்யா அரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். பெரம்பலூர் ஆட்சியராக அப்துல் ராஸிக் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் ஆட்சியராக நல்லசிவன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வேளாண் துறை இணை செயலாளராக ரவிக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வணிக வரித்துறை இணை செயலாளராக சங்கீதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநராக ஜெயசீலன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை குடிநீர் வடிகால் வாரிய செயல் இயக்குநராக சுகபுத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை மாநகராட்சி இணை ஆணையராக (சுகாதாரம்) தாகரே சுபம் தந்தியோரோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிப்காட் நிறுவனத்தின் செயல் இயக்குநராக வீர் பிரதாப் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக பொன்மணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாநகராட்சி ஆணையராக கேத்ரீன் சரண்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.