×

மனைவியை கல்லால் அடித்து கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை

கரூரில், மனைவியை கல்லால் அடித்து கொலை செய்து விட்டு, கணவனும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் வடக்கு காந்திகிராமம் இந்திரா நகரில் வசித்து வந்த சுப்பிரமணி (45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சின்னப்பொண்ணு (42).இவர்களுக்கு இரண்டு மகன்களும் 1மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர். சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால், தினமும் குடித்து
 

கரூரில், மனைவியை கல்லால் அடித்து கொலை செய்து விட்டு, கணவனும் ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் கரூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் வடக்கு காந்திகிராமம் இந்திரா நகரில் வசித்து வந்த சுப்பிரமணி (45). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சின்னப்பொண்ணு (42).இவர்களுக்கு இரண்டு மகன்களும் 1மகளும் உள்ளனர். மூவருக்கும் திருமணமான நிலையில், கணவன் மனைவி மட்டும் தனியாக வசித்து வந்தனர்.

சுப்பிரமணிக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால், தினமும் குடித்து விட்டு வந்து மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

வழக்கம் போல நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரத்தில் கல்லால் மனைவியை அடித்துள்ளார். இதில், சம்பவ இடத்திலேயே மனைவி உயிரிழந்துள்ளார்.

மனைவியை கல்லால் அடித்து கொலை செய்து விட்டோம் என்ற பயத்தில் சுப்பிரமணி, கரூர் வழியாக மதுரை சென்ற சரக்கு ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தாந்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.