×

‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் வழங்க வேண்டும்: மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பல்வேறு நதிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். நதிநீர் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடந்தாய் வாழி காவேரி, காவேரி – கோதாவரி இணைப்பு திட்டம், குண்டாறு இணைப்பு திட்டம்,
 

மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் பல்வேறு நதிநீர் திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது நிலையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் உடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

நதிநீர் இணைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நடந்தாய் வாழி காவேரி, காவேரி – கோதாவரி இணைப்பு திட்டம், குண்டாறு இணைப்பு திட்டம், கருமேனி நதிநீர் இணைப்பு திட்டம் காவிரி ஆற்றை சீரமைப்பது குறித்தும் தமிழகத்தில் நீர் மேலாண்மையில் எடுக்கப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.