×

நாளை தஞ்சை மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு..! 

 

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் அமைந்துள்ள தியாகராஜர் சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கி மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது. காவிரி கரையில் உள்ள அவரது சமாதி வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றன. இவ்விழாவின் மிக முக்கிய நிகழ்வான 'ஆராதனை விழா' வருகின்ற ஜனவரி 7-ம் தேதி (புதன்கிழமை) நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, இசை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் விழாவில் பங்கேற்கும் வசதியாக, ஜனவரி 7-ம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 24-ம் தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கருவூலங்கள் மட்டும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் அன்றைய தினம் செயல்படும் என்றும் ஆட்சியர் தெளிவுபடுத்தியுள்ளார்.