கோயில் புதுப்பிக்கும் பணிக்கு ஒரு லட்சம் லஞ்சம் – தஞ்சை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கைது!
Jul 4, 2026, 12:30 IST
தஞ்சை அம்மாபேட்டை அடுத்த தீபாம்பாள்புரத்தில் வன்னிக நாதர் கோயில் உள்ளது. இதனை புதுப்பிக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்ய இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜோதிலட்சுமியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கு ஒப்பந்தராரரிடம் ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். அதனை தனது ஏஜெண்ட்டான கிரிஜா என்பவரிடம் வழங்கும்படியும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ரசாயனம் தடவிய பணத்தை அவர்கள் பெற்றபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
அறநிலையத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட இந்த சோதனையும், உயர் அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.