அதிவேகம்.. மதுபோதை.. நொடியில் நிகழ்ந்த விபத்து..! இருசக்கர வாகனம் மீது மோதி 3 பேர் படுகாயம்!
Mar 2, 2026, 14:03 IST
கோவை விமான நிலையம் செல்லும் சாலையில், வரதராஜா மில் பேருந்து நிறுத்தம் அருகே அதிவேகமாக வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவரும், இருசக்கர வாகன ஓட்டியும் படுகாயமடைந்தனர்.
உடனடியாக, அப்பகுதி மக்கள் மூவரையும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், காரில் இருந்தவர்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.