அன்று எங்களை விமர்சித்தார்.. இன்று அவரே ஓடுகிறார்! CM விஜய்யின் டெல்லி பயணத்தை சீண்டிய ஸ்டாலின்..!!
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கடந்த அக்டோபர் முதல் கரூர் சுற்றுலா மாளிகையில் தங்கி சிபிஐ அதிகாரிகள் பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வந்தனர். டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணையில், தவெக தலைவரும் தற்போதைய முதல்வருமான விஜய், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோரும் ஆஜராகினர்.
இதைத் தொடர்ந்து, தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மார்ச் முதல் வாரத்தில் விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நாங்கள் டெல்லி சென்றதை விமர்சித்த முதல்வர் விஜய், தற்போது கரூர் கூட்ட நெரிசல் மரண வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் டெல்லி சென்றாரா? என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக மகளிர் மற்றும் மகளிர் தொண்டரணி ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், எதிர்க்கட்சிகளை விமர்சிப்பவர்கள் தங்களின் டெல்லி பயணங்களின் பின்னணியில் உள்ள உண்மையான காரணங்களை மக்களுக்கு விளக்க வேண்டும் என்று சாடினார்.