×

பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் ஆளுநர் தரிசனம்: கும்ப மரியாதையுடன் பலத்த வரவேற்பு!

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் இன்று மாலை 41வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலையே, பன்வாரிலால் புரோகித விமானத்தில் கோவைக்கு சென்றார். கோவையில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகை தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில், கோவையில் இருக்கும் பிரசித்தி
 

கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் இன்று மாலை 41வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று காலையே, பன்வாரிலால் புரோகித விமானத்தில் கோவைக்கு சென்றார்.

கோவையில் அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டு, அரசு விருந்தினர் மாளிகை தங்க வைக்கப்பட்டார். இந்த நிலையில், கோவையில் இருக்கும் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சென்று ஆளுநர் சாமி தரிசனம் செய்தார். ஆளுநர் வரவிருப்பதாக முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டதால், ஆளுநர் வரும் போது கோவில் அர்ச்சகர்கள் கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.

கோவிலில் சாமி தரிசனம் செய்த ஆளுநர், பிரகாரத்தை சுற்றி வரும் போது அங்கிருந்து பசு மாட்டிற்கு உணவு கொடுத்தார். அதோடு, கோவில் யானையிடம் ஆசி பெற்றார். ஆளுநரின் வருகையையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.