×

போராட்டம் அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் நாளை அரசு பேச்சுவார்த்தை

 

ஜாக்டோ ஜியோ கூட்​டமைப்புடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நாளை  பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

அரசு ஊழியர்​களுக்கு பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டத்தை ரத்து செய்​து​விட்டு மீண்​டும் பழைய ஓய்​வூ​தியத் திட்​டத்தை அமல்​படுத்​து​வது, அரசு துறை​களில் காலி​யாக உள்ள லட்​சக்​கணக்​கான பணி​யிடங்​களை நிரப்​புவது ஊதி​யக்​குழு முரண்​பாடு​களை களைவது, சிறப்​புக் கால​முறை, தொகுப்​பூ​தி​யம், மதிப்பூ​தி​யத்​தில் பணி​யாற்​றும் ஊழியர்​களுக்கு கால​முறை ஊதி​யம் வழங்​கு​வது உள்​ளிட்ட 10 அம்ச கோரிக்​கைகளை வலி​யுறுத்தி ஜன.6 முதல் கால​வரையற்ற வேலைநிறுத்​தப் போராட்​டத்​தில் ஈடு​படப்​போவ​தாக ஜாக்டோ ஜியோ கூட்​டமைப்பு அறி​வித்​துள்​ளது.


இந்நிலையில் கடந்த 22ம் தேதி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து 2ஆம் கட்டமாக நாளை சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ கூட்​டமைப்புடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ள நிலையில் 2வது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.