கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து
கரூர் கூட்ட நெரிசலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உயர்நீதின்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரணையின்போது, கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கியது அரசின் கொள்கை முடிவு. கரூரில் கூட்டத்தை சரியாக காவல்துறை கையாளாததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது; இதனால்தான் உயிரிழப்பு நடந்துள்ளது. உயிரிழந்த 41 பேர் மீதும் எந்த தவறும் இல்லை என அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார். கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அனுமதி தேவையில்லை என டி.என்.பி.எஸ்.சி. சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதனைக் கேட்ட உயர் நீதிமன்றக் கிளை நீதிபதிகள், கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு சாதாரண பணி வழங்கியதாக அரசு கூறுவதை ஏற்க முடியாது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு அரசு பணி என்றால் அரசு பேருந்து மோதி உயிரிழப்பவர்களின் குடும்பத்திற்கும் அரசு பணி வழங்குவீர்களா? என தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பினர். மேலும் கருணை அடிப்படையில் வேலை பெற பலர் காத்திருக்கும் நிலையில் கரூர் கூட்ட நெரிசல் துயரத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மட்டும் முன்னுரிமை ஏன்? என 41 பேருக்கு அரசு வேலை வழங்கிய தமிழ்நாடு அரசின் அரசாணையை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.