84 வயது நோயாளிக்கு 2 மணிநேரமாக வீல் சேர் கொடுக்காமல் அலைக்கழிப்பு! அரசு மருத்துவமனை ஊழியர்கள் சஸ்பெண்ட்
Sep 10, 2025, 15:40 IST
கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த 84 வயது முதியவருக்கு வீல் சேர் கொடுக்காததால், மகனே அவரை இழுந்தவாறு சென்று ஆட்டோவில் அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை சேர்ந்தவர் வடிவேல் (84). இவருக்கு சக்கரை நோயால் ஏற்பட்ட ஆழமான கால் புண்ணிற்காக கோவை அரசு மருத்துவமனையில் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல வடிவேலை சிகிச்சைக்காக அவரது மகன் கோவை அரசு மருத்துவமனையில் உள்ள புதிய கட்டிடத்திற்கு அழைத்து வந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் மீண்டும் வீட்டிற்கு செல்ல நீண்ட நேரம் காத்திருந்தும் வீல் சேர் ஏதும் வராததால், ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவரது மகன், வடிவேலை தூக்க முடியாமல் கை தாங்கலாக இழுத்துச் சென்றார். பின்னர் ஆட்டோ மூலம் தந்தையை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.