×

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அரசு ஊழியர்களுக்கு அனுமதி மறுப்பு!

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரசுப் பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில்கள் இன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சேவையில் முன்கள பணியாளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அடையாள அட்டை, அலுவலக கடிதம் இருந்தாலும் தலைமை செயலக அனுமதிக் கடிதமும் கேட்பதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு
 

சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசுப் பணிகளில் ஈடுபடுவோருக்காக புறநகர் ரயில்கள் இன்று இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ரயில் சேவையில் முன்கள பணியாளர்களும் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் புறநகர் மின்சார ரயில்களில் அனுமதி மறுப்பதாக அரசு ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அடையாள அட்டை, அலுவலக கடிதம் இருந்தாலும் தலைமை செயலக அனுமதிக் கடிதமும் கேட்பதாக அரசு ஊழியர்கள் புகார் தெரிவிக்கின்றனர். அரசு ஊழியர்களுக்கு ரயிலில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சுகாதாரம், மின்சாரத்துறை மற்றும் தலைமை செயலக ஊழியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இந்த புறநகர் ரயில் சேவையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.