×

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் கவலை!

 

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.43,840-க்கு விற்பனை செய்யப்பட்டது.  ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து  ரூ.5,480-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் வெள்ளி விலையும் உயர்ந்தது. வெள்ளி கிராமிற்கு 50 பைசா உயர்ந்து ரூ.80.00 ஆகவும்,  கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.80,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் தங்கம் 44,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ஆபரண தங்கம் 5,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.