×

திடீரென உயர்ந்த தங்கம் விலை - இல்லத்தரசிகள் அதிர்ச்சி!

 

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை குறைந்து வந்தது. செவ்வாய் கிழமை தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்தது. புதன் கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து, ஒரு சவரன்  44,240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினம்  சவரனுக்கு ரூ.200 குறைந்து ஒரு சவரன் ரூ.44,040க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து, ஒரு சவரன் ரூ.43,880க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.5,485க்கு விற்பனையானது. 

இந்த நிலையில், தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.44,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.5,500ஆக விற்பனையாகிறது. வெள்ளி விலையை பொறுத்தவரையில் ஒரே விலையில் நீடித்து வருகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.76.20க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,200க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.