×

2வது நாளாக எகிறிய தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.360 உயர்ந்தது..!!

 

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ளது.  இன்றையதினம் சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது.  

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை,  கடந்த மாதம் இறுதியில்  தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்து வந்தது.  அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கடந்த 6 வாரத்தில் மட்டும்  சவரனுக்கு ரூ.2,500 குறைந்தது.  இந்த நிலையில் 7 நாட்களுக்குப் பிறகு நேற்று  தங்கம் விலை அதிரடியாக  சவரனுக்கு ரூ. 840 உயர்ந்துள்ளது.  


 
அதன்படி சென்னையில் நேற்று  22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.840  உயர்ந்து  ஒரு சவரன் ரூ.72,160க்கு விற்பனை செய்யப்பட்டது.  அதேபோல் ஒரு கிராம் ரூ.9,020க்கு விற்பனையானது. தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றம் கண்டுள்ள தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்று தங்கம் ஒரு கிராம் 72,520 ரூபாய்க்கும்,  ஒரு கிராம் ரூ.9,065 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  இதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,20,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.