×

“எட்டிப்பார்த்துட்டே இருந்தா ஆ.. ஆ.. நான் ஓரமா நிற்கிறேன்”- பிரஸ்மீட்டில் டென்சனான கங்கை அமரன்

 

கவிஞர் வாலியின் 94 வது பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள சர்.பிடி ஹாலில் நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சியில் இயக்குனர்கள் கே. பாக்யராஜ், லிங்குசாமி, இசையமைப்பாளர் கங்கை அமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கங்கை அமரன் உள்ளிட்டோருக்கு விருதும் வழங்கப்பட்டது. 

மேடையில் பேசிய இசையமைப்பாளர் கங்கை அமரன், “அம்மா என்றழைக்காத உயிரில்லையே என்ற பாடலை பாடியவர், தங்கள் வாழ்க்கை வரலாற்றை பற்றி பேசி, பெரியவர்களின் ஆசிர்வாதம் பாட்டு வழியே கேட்கும் போது சந்தோஷம் தான். பாக்யராஜை மேடையில் கலாய்த்து பேசிய கங்கை அமரன், நான் பாடினால் எவ்வளவு நேரம் வேனாலும் கேட்பீர்கள் தானே என்று ரசிகர்களை பார்த்து சிரித்து கொண்டே கேட்டார். நாங்கள் இசையில் வளர காரணமாக இருந்தது எங்கள் அம்மா தான். அத்தோடு சில எழுத்தாளர்களின் எழுத்துக்களும் தான்” என்றார்.