×

மறைந்த பின்னணிப்பாடகி கல்யாணி மேனன் இறுதிச்சடங்கு

மறைந்த பிரபல பின்னணிப்பாடகி கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது. தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல பாடகியாக இருந்தவர் கல்யாணி மேனன். 1979ம் ஆண்டில் இவர் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். நல்லதொரு குடும்பம் படத்தில் ’செவ்வானமே பொன் மேகமே’பாடல்தான் இவரது முதல் பாடல். தொடர்ந்து பாடல்கள் பாடி வந்த அவர், புதிய மன்னர்கள் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் பாடிய ‘வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச
 

மறைந்த பிரபல பின்னணிப்பாடகி கல்யாணி மேனனின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் நடைபெறுகிறது.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பிரபல பாடகியாக இருந்தவர் கல்யாணி மேனன். 1979ம் ஆண்டில் இவர் திரையுலகில் பாடகியாக அறிமுகமானார். நல்லதொரு குடும்பம் படத்தில் ’செவ்வானமே பொன் மேகமே’பாடல்தான் இவரது முதல் பாடல். தொடர்ந்து பாடல்கள் பாடி வந்த அவர், புதிய மன்னர்கள் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் பாடிய ‘வாடி சாத்துக்குடி பனியில நனைஞ்ச திராட்சைக்கொடி’ஹிட் ஆனது. தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிவந்தார். காதலன் படத்திற்காக ‘இந்திரையோ இவள் சுந்தரியோ’ என்றும், முத்து படத்தில், ‘குலுவாலிலே’ என்றும், அலைபாயுதே படத்தில் ‘அலைபாயுதே’ என்றும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ‘ஓமணப்பெண்ணே.’ என்றும் தொடர்ந்து ரகுமான் இசையில் பாடி வந்தார்.

கல்யாணி மேனனுக்கு ராஜீவ்மேனன், கருணாகரன் மேனனென்ற இரண்டு மகன்கள். இதில் ராஜீவ்மேனன் இந்திய சினிமாவின் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர். மின்சாரக்கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட படங்களை இயவர் இயக்கியிருக்கிறார்.

சினிமா மற்றும் பக்தி ஆல்பங்களிலும் பாடி வந்த கல்யாணி மேனன், வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல் பிரச்சனையினால் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளதனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மதியம் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மறைந்த கல்யாணி மேனனுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இன்று பிற்பகல் 2 மணி அளவில் சென்னை பெசண்ட் நகரில் உள்ள மயானத்தில் கல்யாணி மேனன் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.