×

முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவு : முதல்வர் இரங்கல்!

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியவர் தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன். சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக இருந்த இவர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவர்.92 வயதான ஓய்வு பெற்ற டிஜிபி ராதாகிருஷ்னன் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர்
 

தமிழக காவல்துறை முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

உளவுப்பிரிவு டிஐஜியாகவும், சென்னை மாநகர காவல் ஆணையராகவும் பணியாற்றியவர் தமிழக முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன். சட்டம்-ஒழுங்கு ஐஜி, டிஜிபியாக இருந்த இவர் எழுத்தாளர், சமூக ஆர்வலர் என பன்முகங்களை கொண்டவர்.92 வயதான ஓய்வு பெற்ற டிஜிபி ராதாகிருஷ்னன் உடல்நல குறைவால் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் மறைவுக்கு தமிழக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவிட்டுள்ளார். அதில், எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் டிஜிபி போன்ற உயர்ந்த பதவிகளில் திறம்பட பணியாற்றியவர் முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் . அவரது மறைவு செய்தியை கேட்டு துயருற்றேன். அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.