×

மனைவியின் கையை துண்டாக வெட்டிய மீன் வியாபாரி : அதிர்ச்சி தரும் சம்பவம்!

மனைவியின் கையை கணவர் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆணைவாரி நல்லதண்ணி குளத்தைச் சேர்ந்தவர் சஞ்சைகாந்தி – சத்தியவதி. இவர்ளுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். மீன் வியாபாரியான சஞ்சைகாந்தி சத்தியவதியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சத்தியவதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை சமாதானம்
 

மனைவியின் கையை கணவர் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆணைவாரி நல்லதண்ணி குளத்தைச் சேர்ந்தவர் சஞ்சைகாந்தி – சத்தியவதி. இவர்ளுக்கு சஞ்சய் என்ற மகனும், சஞ்சனா என்ற மகளும் உள்ளனர். மீன் வியாபாரியான சஞ்சைகாந்தி சத்தியவதியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார்.

இருப்பினும் கணவன் மனைவி இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் சத்தியவதி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். மனைவியை சமாதானம் செய்து அழைத்து வரும் முயற்சியில் இறங்கிய சஞ்சைகாந்திக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த சஞ்சைகாந்தி ,மறைத்து வைத்திருந்த கொடுவாள் கத்தியால் மனைவின் கை மற்றும் தலை பகுதியில் வெட்டியுள்ளார். வலி தாங்க முடியாமல் சத்தியவதி வீதியில் ஓட, அவரை விரட்டி விரட்டி வெட்டியதாக தெரிகிறது. இதில் சத்தியவதியின் கை துண்டானது.

இதையடுத்து சத்தியவதியை மீட்ட அப்பகுதியினர் அவரை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த விருத்தாசலம் போலீசார் , சஞ்சைகாந்தியை கைது செய்ததுடன் அவரிடமிருந்த கத்தியையும் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.