தீப ஒளி திருநாளில் தமிழகத்தில் 13 இடங்களில் தீ விபத்து பதிவு..!
Oct 21, 2025, 05:10 IST
தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பட்டாசு வெடித்தது உள்ளிட்டவற்றால், 13 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது என தீயணைப்பு துறை தெரிவித்து உள்ளது. இவற்றில் சென்னையில் மட்டுமே 3 இடங்களில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ மருத்துவமனைக்கு இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, பொதுமக்கள் பருத்தி ஆடைகளை அணிந்து பட்டாசுகளை வெடிக்கும்படி வேண்டுகோளாக கேட்டு கொள்கிறேன். அதுவே சிறந்தது. சில்க் அல்லது நைலான் உடைகளை அணிய வேண்டாம். காலணிகளை அணிந்து கொண்டு, திறந்த வெளியில் பட்டாசுகளை வெடியுங்கள் என்று கூறினார்.