#FinanceMinisterMissing என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கிய நம்ம புள்ளிங்கோ!
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்கக்கோரி ட்விட்டரில் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்துவருகின்றனர்.
2018-2019ம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கை, வருமான வரி படிவத்துடன் தாக்கல் செய்வதற்கு செப்டம்பர் 30ம் தேதி கடைசி நாளாகும். அப்படி வருமான வரியை தாக்கல் செய்யாவிட்டால் ரூ.1000 முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் செலுத்த வேண்டும். வட்டி மற்றும் அபராதம் போன்றவற்றையும் செலுத்த நேரிடும் என வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.
இந்த காலக்கெடு தேதியை நீட்டிக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளிக்காததால் நிதியமைச்சரை காணவில்லை #FinanceMinisterMissing #TaxAuditExtendToday என்று நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.