×

மூலையில் கட்டி.. பிரபல சின்னத்திரை நடிகர் கவலைக்கிடம்!

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரை தொடர்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். காஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், காசளவு தேசம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல வாணி ராணி, செல்வி உள்ளிட்ட பிரபலமான சீரியல்களிலும் இனியவள், அலைபாயுதே, நரசிம்மா, வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்காக கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது. வேணு அரவிந்த்திக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு இருப்பது
 

பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்தின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை தொடர்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் வேணு அரவிந்த். காஸ்ட்லி மாப்பிள்ளை, கிரீன் சிக்னல், காசளவு தேசம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார். அதே போல வாணி ராணி, செல்வி உள்ளிட்ட பிரபலமான சீரியல்களிலும் இனியவள், அலைபாயுதே, நரசிம்மா, வல்லவன் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரது நடிப்பிற்காக கலைமாமணி விருதும் வழங்கப்பட்டது.

வேணு அரவிந்த்திக்கு அண்மையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. கொரோனா சிகிச்சையில் இருந்து மீண்டு வந்த வேணு அரவிந்த்துக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. பின்னர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் கட்சி அகற்றப்பட்டது. அவர் தற்போது கோமாவில் இருப்பதாகவும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. அவர் விரைவில் மீண்டு வர வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள்.