×

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரை பாண்டியன் காலமானார்!

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரை பாண்டியன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார். அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வந்தவர். அதுமட்டுமின்றி மௌனம் பேசியதே, ரன், சாமி, ஜெமினி உள்ளிட்ட படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் துரைப்பண்டியன் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அதிமுக நிர்வாகிகள் என பலரும் இரங்கல் கூறி
 

பிரபல வழக்கறிஞரும் நடிகருமான துரை பாண்டியன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

அதிமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த துரைப்பாண்டியன் குற்றவியல் தன்மையுடைய வழக்குகளில் ஆஜராகி வந்தவர். அதுமட்டுமின்றி மௌனம் பேசியதே, ரன், சாமி, ஜெமினி உள்ளிட்ட படங்களிலும் குணசித்திர வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் துரைப்பண்டியன் நெஞ்சுவலி காரணமாக இன்று உயிரிழந்தார். நெஞ்சுவலி காரணமாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு திரையுலகினர், அதிமுக நிர்வாகிகள் என பலரும் இரங்கல் கூறி வருகின்றனர்.