பிரபல ஒளிப்பதிவாளர் செழியன் காலமானார்..!
Jul 10, 2026, 10:02 IST
சென்னை தரமணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான செழியன் இன்று காலை அவர் காலமானார்.
அவரது மறைவு திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்லூரி படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமான செழியன், தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் ஆகிய படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.
இவர் இயக்கிய டூலெட் படத்திற்காக மத்திய அரசின் தேசிய திரைப்பட விருதை வென்றது.செழியனின் மறைவுக்கு திரையுலகினரும், பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.